உள்ளூர் செய்திகள்
கே.பி அன்பழகன்

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Published On 2022-01-20 02:10 GMT   |   Update On 2022-01-20 02:27 GMT
கே.பி அன்பழகன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அவர் தொடர்புடைய இடங்கள் என 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 

வருமானத்திற்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக கே.பி அன்பழகன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தி வருகிறது.

தெலுங்கானா மாநிலத்திலும் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துகிறது.

Tags:    

Similar News