உள்ளூர் செய்திகள்
கைது

தஞ்சையில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

Published On 2021-12-05 07:39 GMT   |   Update On 2021-12-05 07:39 GMT
தஞ்சையில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை காசுக்கடை தெரு பகுதியில் நகர மேற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அருள்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் வடக்கு அலங்கம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(வயது45) என்பதும், விற்பனைக்காக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் தஞ்சை கிழக்கு போலீசார் ஏ.ஒய்.ஏ. நாடார் சாலையில் ரோந்து பணியில் இருந்த போது அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்த முள்ளுக்கார தெருவை சேர்ந்த பிச்சை மணி என்ற மணிகண்டனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News