ஆன்மிகம்
திருச்சி உத்தமர் கோவில்

108 திவ்யதேசங்களில் 32-வது கோவிலான உத்தமர் கோவில்

Published On 2019-12-20 01:36 GMT   |   Update On 2019-12-20 01:37 GMT
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் பிச்சாண்டார் கோவில் திருக்க ரம்பனூரில் அமைந்துள்ளது உத்தமர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் பிச்சாண்டார் கோவில் திருக்க ரம்பனூரில் அமைந்துள்ளது உத்தமர் கோவில். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அருளும் தலம். 108 திவ்யதேசங்களில் 32-வது கோவிலான இக்கோவில் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.    

சிவன், பிச்சாடனாராக வந்து தன் தோஷம் நீங்கப் பெற்ற தலம் என்பதால் இந்த ஊர் “பிச்சாண்டார் கோவில்’ என்றும், மகா விஷ்ணு கதம்ப மரமாக நின்ற ஊர் என்பதால் கதம்பனூர் என்றும் கரம்பனூர் என் றும் அழைக்கப்படுகிறது. கணவனும், மனைவியும் இல்லற வாழ்க்கையில் சேர்ந்து வாழ்வதே உத்தமம்.
இவ்வாறு ஒருவருக்கொரு வர் இணக்கமாக வாழ்பவர்களை உத்தமர் என்பர். இங்கு மும்மூர்த்திகளும் தம்பதி சமேதராக இருப்பதால் திருமங்கையாழ்வார் இத்தலத்தை உத்தமர் கோவில் என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.     
 
படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனக்கென தனியே கோவில் இல்லையே என்ற மனக்குறை இருந்தது. எனவே, மகாவிஷ்ணு அவரை பூலோகத்தில் பிறக் கும்படி செய்தார். பிரம்மா இத்தலத்தில் பெருமாளை வணங்கி தவம் செய்து வந் தார். அவரது பக்தியை சோதிப்பதற்காக மகா விஷ்ணு, கதம்ப மரத்தின் வடிவில் நின்று கொண்டார். இதையறிந்த பிரம்மா கதம்ப மரத்திற்கு பூஜைகள் செய்து, சுவாமியை வணங்கினார்.

அவரது பக்தியில் மகிழ்ந்த மகா விஷ்ணு காட்சி தந்து, நீ எப்போதும் இங்கேயே இருந்து என்னை வழிபட்டு வா, நீ பெற்ற சாபத்தால் உனக்கு கோவில்கள் இல்லா விட்டாலும் இங்கு தனியே வழிபாடு இருக்கும் என்றார். அதன்படி பிரம்மாவும் இங்கேயே தங்கினார். பிற் காலத்தில் இவருக்கும் சன் னதி கட்டப்பட்டது.
பிரம்மாவுக்கு இடப்புறத் தில் ஞான சரஸ்வதி தனி சன் னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இவள் கைக ளில் வீணை இல்லாமல் ஓலைச்சுவடி, ஜெப மாலையு டன் காட்சி தருவது சிறப்பு. பிரம்மாவிற்கு தயிர் சாதம், ஆத்தி இலை படைத்தும், சரஸ்வதிக்கு வெள்ளை வஸ் திரம், தாமரை மலர் மாலை சாத்தியும் வழிபட்டால் ஆயுள் கூடும், கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. குருப் பெயர்ச்சியின்போது பிரம் மாவிற்கு விசேஷ பூஜை கள் நடக்கிறது.

விஷ்ணு கிழக்கு பார்த்த படி பள்ளி கொண்ட கோலத் திலும், உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்தி லும் உத்யோக விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். பூரணவல்லி தாயார் தனிச்சன்னதியில் அருளுகிறாள். இவள் என்றும் உணவிற்கு பஞ்சமில்லா நிலையைத் தரக்கூடியவள். அருகில் மகாலட்சுமிக்கும் தனிச்சன் னதி இருக்கிறது. இவ்விரண்டு தாயார்களது தரிசனம் விசேஷ பலன்களை தரக் கூடியது.

பெருமாளுக்கு நேர் பின் புறத்தில் சிவன் மேற்கு பார்த்த படி லிங்க வடிவில் இருக்கிறார். இவர் பிட்சாடனராக கோஷ்டத்திலும், உற்சவராக வும் இருக்கிறார். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த் திகளும் தனித்தனி சன்னதிகளில் அம்பாள்களுடன் காட்சி தருகின்றனர். ஒரே தலத்தில் மும்மூர்த்தி களையும் தரிசனம் செய்வது அபூர்வம்.

கார்த்திகை தீபத்திருவிழா வின்போது மூவருக்கும் மூன்று திசைகளில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு ஒன்றாக உலா வருகின்றனர். தைப்பூசத் திருவிழாவில் சிவனுக்கும், மாசி மகத்தில் பெருமாளுக்கும் கொள்ளிடத்தில் தீர்த்தவாரி விழா நடக்கிறது. சிவகுரு தெட்சிணா மூர்த்தி, விஷ்ணு குரு வரதராஜர், குரு பிரம்மா, சக்தி குரு சவுந்தர்ய பார்வதி, ஞான குரு சுப்பிரமணியர், தேவ குரு வியாழன், அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆகிய ஏழு குரு சுவாமிகளும் குருவிற்குரிய இடங்களில் இருந்து அருளுகின்றனர். குருப் பெயர்ச்சியின்போது ஏழு குருக்களுக்கும் விசேஷ அபிஷேகங்கள் நடக்கிறது. எனவே இத்தலம் சப்தகுரு தலம் எனப்படுகிறது.

சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார் வதிதேவி அவரை தனது கணவன் என நினைத்து பணி விடை செய்தாள். இதைக் கண்ட சிவன், குழப்பம் வராமல் இருக்க பிரம்மா வின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாலமும் (மண்டை ஓடு) அவரது கையு டன் ஒட்டிக்கொண்டது. சிவன் எவ்வளவோ முயன் றும் அவரால் கபாலத்தை பிரிக்க முடியவில்லை. அவ ருக்கு படைக்கப்பட்ட உணவு கள் அனைத்தையும் கபா லமே எடுத்துக்கொண்டது.

எவ்வளவு உணவு இட்டா லும் கபாலம் மட்டும் நிறைய வேயில்லை. பசியில் வாடிய சிவன், அதனை பிச்சைப் பாத்திரமாக ஏந்திக்கொண்டு பிட்சாடனார் வேடத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார். அவர் இத்தலத்திற்கு வந்த போது பெருமாள், சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும் படி மகாலட்சுமியிடம் கூறினார். அவளும் கபாவத்தில் பிச்சையிடவே அது பூரணமாக நிரம்பி சிவனின் பசி நீக்கியது. இதனால் தாயார் பூரண வல்லி என்ற பெயரும் பெற்றாள். மகாவிஷ்ணுவும் பள்ளி கொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி தந்தார்.

இக்கோவிலில் புரட்டாசி மாதம் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சிவன் சன்னதிகளில் நடராஜர் திருமஞ்சனமும், புரட்டாசி சனிக்கிழமைகளில் மூலவர் புருஷோத்தம பெருமாளுக்கு திருமஞ்சன மும் நடைபெறுகிறது. நவராத்தி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரியில் மும்மூர்த்தி களுக்கும் முப்பெரும் தேவி யர்களுடன் விசேஷ பூஜைகள் நடத்தப்படுகிறது.

நவராத்திரி விழாவில் குறிப்பாக விஜயதசமியன்று (அக்டோபர் 8-ந்தேதி, புரட் டாசி 21) கல்விக்கடவுளான ஞான சரஸ்வதிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகி றது. அம்பாளுக்கு முன்பாக ஓலைச்சுவடிகள் வைக்கப் பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. மேலும் கல்வியை தொடங்கும் குழந் தைகளுக்கு நெல்லில் எழுதி ஏடு தொடங்கும் நிகழ்ச்சி இந்த கோவிலில் விமரிசையாக நடத்தப்படுகிறது. புரட்டாசி மாதம் நடைபெறும் இந்த வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி-அம்பாளை தரிசித்து வருகின்றனர்.

பாவம் பறந்தோடும்

சிலர் நிறைய பாவம் செய்து இருப்பார்கள். அந்த பாவம், பல பரிகாரங்கள் செய்தும் தீராமல் இருக்கலாம். இத்தகைய சூழ்நிலையில் இருப்பவர்கள் திருக்கரம்பனூர் தலத்தில் 3 நாட்கள் தங்கி வழிபாடுகள் செய்தால் பொதும், அது எத்தகைய பெரிய பாவமாக இருந்தாலும் சரி, பஞ்சாக பறந்தோடி விடும்.
சிலருக்கு முன்னோர் அல்லது பெரியவர்கள் சாபம் ஏற்பட் டிருக்கும். அவர்கள் எது செய்தாலும் காரியத்தடை உண்டாகும். எதையும் முழுமையாக செய்ய முடியாமல் தவிப்பவர்களின் இச்சாபம் இத்தலத்தில் எளிதில் விரட்டியடிக்கப்படும்.

வாரிசு இல்லாமல் தவிப்பவர்கள், கொடிய நோயால் துடிப்பவர்கள், இங்குள்ள புருஷோத்தமனிடம் மனம்விட்டு பிரார்த்தித்தால் நிச்சயம் நல்லது நடக்கும்.
தம்பதியர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் குடும்பம் சிறக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம் கிடைக்க, கிரக தோஷங்கள் நீங்க, வேண்டிக் கொள்ளலாம். சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய் வித்து, நிவேதனம் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.
Tags:    

Similar News