செய்திகள்
ஓசூர் அருகே தோட்ட பராமரிப்பாளர் தற்கொலை
ஓசூர் அருகே தோட்ட பராமரிப்பாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் அருகே உள்ள கொத்தூரை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 45). தனியார் நிறுவனத்தில் தோட்ட பராமரிப்பாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று ஏற்பட்ட பிரச்சினையில் மனமுடைந்த எல்லப்பன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.