செய்திகள்
ஆலங்குடி அருகே குளத்தில் மூழ்கி முதியவர் பலி
ஆலங்குடி அருகே குளிக்க சென்ற முதியவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் செரியாலூர் ஜெமின் கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 60), தொழிலாளி. இவர் நேற்று அங்குள்ள குளத்திற்கு குளிக்க சென்றார். அப்போது குளத்தின் ஆழப்பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
சம்பவ இடத்திற்கு கீரமங்கலம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சென்று உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிதம்பரம் உடலை மீட்டனர். மேலும் சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.