செய்திகள்
அரிவாள் வெட்டு

திண்டுக்கல் அருகே வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு- 3 பேர் கைது

Published On 2021-11-20 12:05 GMT   |   Update On 2021-11-20 12:05 GMT
திண்டுக்கல் அருகே வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே உள்ள பொன்னகரத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 27). கட்டிட மேஸ்திரி. இதே பகுதியை சேர்ந்தவர் ஹரி பாலாஜி (20). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் காளியம்மன் கோவில் அருகே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவர்கள் 2 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் நேற்று சிறுமலை பிரிவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் பாலமரத்துபட்டியை சேர்ந்த பிரசன்னா (26), தனபால் (25), கார்த்திக் (26) என்பதும் முன்விரோதம் காரணமாக மாணிக்கம், ஹரி பாலாஜியை அரிவாளால் வெட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து பிரசன்னா, தனபால், கார்த்திக் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News