செய்திகள்
ரோஜர் பெடரர்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து ரோஜர் பெடரர் விலகல்

Published On 2021-07-13 20:20 GMT   |   Update On 2021-07-13 20:20 GMT
டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து ரபேல் நடால், செரீனா வில்லியம்ஸ் உள்பட பல்வேறு வீரர், வீராங்கனைகள் விலகியுள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டித் தொடர் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது.

கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு பல்வேறு வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் நட்சத்திர டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கப் போவது இல்லை என அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பெடரர் கூறுகையில், முழங்கால் காயத்தால் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக ஒலிம்பிக் தொடரில் இருந்து விலகுகிறேன். ஒலிம்பிக் தொடரில் இருந்து விலகுவது தனக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News