செய்திகள்
தற்கொலை

திருமங்கலத்தில் வாலிபர் தற்கொலை

Published On 2019-10-10 10:34 GMT   |   Update On 2019-10-10 10:34 GMT
திருமங்கலத்தில் தாயார் திட்டியதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலம்:

திருமங்கலம் முகமது ஷாபுரத்தை சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு அருண்பிரசாத் (வயது 21), அர்ஜுன் (19) என 2 மகன்கள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக கணவன்-மனைவி பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில் அர்ஜூன் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்ததை தாய் கண்டித்துள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த அர்ஜூன் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வேலைக்கு செல்லவில்லை என தாயார் திட்டியதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News