ஆன்மிகம்
திருப்பதி கருடசேவை: சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மலையப்பசாமி
கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் வெளியே வாகன மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று கருடசேவை நடந்தது. அதையொட்டி நேற்று இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் வெளியே வாகன மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதில் கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு, பறக்கும் படை அதிகாரி பாலிரெட்டி, என்ஜினீயர் ஜெகதீஸ்வரரெட்டி, பேஷ்கர் ஸ்ரீஹரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதில் கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு, பறக்கும் படை அதிகாரி பாலிரெட்டி, என்ஜினீயர் ஜெகதீஸ்வரரெட்டி, பேஷ்கர் ஸ்ரீஹரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.