செய்திகள்
சிறப்பான செயல்பாடு - ஓடக்கல்பாளையம் அரசு பள்ளிக்கு விருது
பள்ளியின் செயல்பாடுகள், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் சிறந்த பள்ளி தேர்வு செய்யப்படுகிறது.
திருப்பூர்:
தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த பள்ளிகளுக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. 2020-21ம் ஆண்டுக்கான சிறந்த பள்ளியாக சுல்தான்பேட்டை ஒன்றியம் ஓடக்கல்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதாவிடம், தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் விருதினை பெற்றார்.
இதுகுறித்து வட்டார கல்வி அலுவலர் பிரான்சிஸ் சார்லஸ் கூறுகையில்:
கற்றல் கற்பித்தல், விளையாட்டு போட்டிகள், திறனாய்வு, பள்ளியின் செயல்பாடுகள், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் சிறந்த பள்ளி தேர்வு செய்யப்படுகிறது. அவ்வகையில் ஓடக்கல்பாளையம் பள்ளி சிறந்த பள்ளி விருது பெற்றுள்ளது என்றார்.