வழிபாடு
திருப்பதி

திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான சிபாரிசு கடிதங்கள் நாளை ரத்து

Published On 2022-03-27 05:08 GMT   |   Update On 2022-03-27 05:08 GMT
திருப்பதி கோவிலில் நாளை (திங்கட்கிழமை) சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் கொண்டு வரும் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது. மேலும் 29-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது.
திருமலை :

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

யுகாதி பண்டிகையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 29-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. அதையொட்டி நாளை (திங்கட்கிழமை) சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் கொண்டு வரும் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது. மேலும் 29-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது.

எனவே திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு பக்தர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம்...திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில்
Tags:    

Similar News