செய்திகள்
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,360-க்கு ஏலம்
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2 ஆயிரத்து 360-க்கு ஏலம் போனது.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று பூக்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 35 கிராமங்களில் இருந்து விவசாயிகள் 3.5 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள். இதில் மல்லிகைப்பூ ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.2 ஆயிரத்து 360-க்கு ஏலம் போனது. அதேபோல் முல்லைப்பூ ஒரு கிலோ ரூ.1,400-க்கும், காக்கடா ரூ.1,150-க்கும், செண்டுமல்லி ரூ.70-க்கும், பட்டுப் பூ ரூ.115-க்கும், ஜாதிமல்லி ரூ.1000-க்கும், கனகாம்பரம் ரூ.710-க்கும், சம்பங்கி ரூ.70-க்கும், அரளி ரூ.220-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும், துளசி ரூ.60-க்கும் ஏலம் போனது.
மேலும் நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்து 100-க்கும், முல்லைப்பூ ரூ.1,660-க் கும், காக்கடா ரூ.1,250-க்கும், செண்டுமல்லி ரூ.54-க்கும், பட்டுப் பூ ரூ.120-க்கும், ஜாதிமல்லி ரூ.1000-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும், சம்பங்கி ரூ.80-க்கும், அரளி ரூ.220-க்கும், துளசி ரூ.60-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும் விற்பனை ஆனது.
நேற்று முன்தினத்தை விட நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.260-ம், செண்டுமல்லி ரூ.16-ம், கனகாம்பரம் ரூ.110-ம் விலை அதிகரித்து விற்பனை ஆனது. அதேபோல் முல்லைப்பூ ஒரு கிலோ ரூ.260-ம், காக்கடா ரூ.100-ம், பட்டு்ப்பூ ரூ.5-ம், சம்பங்கி ரூ.10-ம், செவ்வந்தி ரூ.40-ம் குறைந்திருந்தது.