செய்திகள்
விபத்து

திருச்செந்தூர் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 10 பயணிகள் காயம்

Published On 2021-11-01 09:36 GMT   |   Update On 2021-11-01 09:36 GMT
திருச்செந்தூர் அருகே இன்று காலை அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பயணிகள் காயம் அடைந்தனர்.
திருச்செந்தூர்:

நெல்லையில் இருந்து உடன்குடி நோக்கி இன்று காலை ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது.

இந்த பஸ் மெஞ்ஞானபுரம் அருகே எழுவரை முக்கி பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த வழியாக வந்த பள்ளி வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஒதுங்கிய போது பஸ் எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பஸ்சில் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். அவர்கள் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தபோது அலறி துடித்தனர்.

சத்தம்கேட்டு அக்கம்- பக்கத்தினர் ஓடிவந்து கவிழ்ந்த பஸ்சில் இருந்து பயணிகளை மீட்டனர். இதில் 10 பேர் காயம் அடைந்து இருந்தனர். அவர்களை சிகிச்சைக்காக அருகே உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்த பஸ் மீட்கும் பணி நடைபெற்றது. 
Tags:    

Similar News