செய்திகள்
திருச்சியில் குடித்து விட்டு வந்ததை மனைவி கண்டித்ததால் மனம் உடைந்த கார்கோ நிறுவன உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி:
திருச்சி உறையூர் வடக்கு அச்சடிகார தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). இவரது மனைவி விஜயராணி. அஸ்கன் கார்கோ மூவர்ஸ் என்ற பெயரில் கிருஷ்ணமூர்த்தி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
அவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டு. நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு மதுபோதையில் கிருஷ்ணமூர்த்தி வந்துள்ளார். அப்போது அவரது மனைவி விஜயராணி சத்தம் போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் மனம் உடைந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டின் மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.