ஆன்மிகம்
தேய்பிறை அஷ்டமியையொட்டிகாலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

தேய்பிறை அஷ்டமியையொட்டிகாலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2021-07-03 04:55 GMT   |   Update On 2021-07-03 04:55 GMT
திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது.
மயிலாடுதுறை ஆன்மீக பேரவை, சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலர் திருமன்றம் சார்பில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது.

விழாவில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், வழிபாடும் நடைபெற்றன. விழாவில் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் நிறுவனர் வக்கீல் ராம.சேயோன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
Tags:    

Similar News