செய்திகள்
விபத்து

மேலூர் அருகே லாரி மோதி சுங்கச்சாவடி பெண் ஊழியர் பலி

Published On 2020-10-18 14:44 GMT   |   Update On 2020-10-18 14:44 GMT
மேலூர் அருகே லாரி மோதி சுங்கச்சாவடி பெண் ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலூர்:

மேலூர் அருகே பெரிய கற்பூரம்பட்டியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பிடாரன். இவரது மனைவி அழகு (வயது 45). இவர் மேலூர் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். 

இந்த நிலையில் நாவினிப்பட்டி பகுதியில் திருச்சி நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக வளர்ந்துள்ள முட் செடிகளை அப்புறப்படுத்தும் பணியில் அழகு ஈடுபட்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி அழகு மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அழகு பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து வழக்குபதிவு செய்த மேலூர் போலீசார் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News