செய்திகள்
நகை பறிப்பு

காரியாபட்டி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2021-09-19 09:50 GMT   |   Update On 2021-09-19 09:50 GMT
காரியாபட்டி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரியாபட்டி:

திருச்சுழி தாலுகா, இலுப்பைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தா (வயது 49). இவரும், இவருடைய உறவினர் முனியாண்டி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் விதை நெல் வாங்குவதற்காக காரியாபட்டிக்கு வருவதற்கு கல்யாணிபுரம் விலக்கு அருகே வந்துகொண்டிருந்தனர். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் வசந்தாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News