செய்திகள்
மேக்சிம் ஜுயூன் பிரே

சிறுமிக்கு தாலி கட்டி பாலியல் தொல்லை- ஓட்டல் தொழிலாளி கைது

Published On 2021-04-30 21:53 GMT   |   Update On 2021-04-30 21:53 GMT
தாலிகட்டி 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டல் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
காரைக்கால்:

காரைக்கால் ஸ்டாலின் நகரை சேர்ந்தவர் மேக்சிம் ஜுயூன்பிரே (வயது 27). இவர், கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் ஓட்டலில் வேலை செய்து வந்தார். கொரோனா காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி வந்த அவர், காரைக்காலில் ஒரு ஓட்டலில் வேலை பார்த்தார்.

அப்போது இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் அந்த சிறுமியை ஆசைவார்த்தை கூறி நண்பர் ஒருவரின் வீட்டுக்கு மேக்சிம் ஜுயூன்பிரே அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அங்கு வைத்து, சிறுமிக்கு வலுக்கட்டாயமாக தாலி கட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, அழுது கொண்டே தனது வீட்டுக்கு சென்றார். அப்போது சிறுமியின் கழுத்தில் தாலி கிடப்பதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அந்த சிறுமியிடம் விசாரித்தபோது அவள், தனக்கு மேக்சிம் ஜுயூன்பிரே தாலி கட்டி பாலியல் தொல்லை கொடுத்ததை தெரிவித்தாள். இதுகுறித்து காரைக்கால் நகர போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு மேக்சிம் ஜுயூன் பிரேவை நேற்று கைது செய்தனர்.
Tags:    

Similar News