செய்திகள்
கொள்ளை

கரூர் அருகே 2 இடங்களில் திருட்டு

Published On 2020-10-24 12:27 GMT   |   Update On 2020-10-24 12:27 GMT
கரூர் அருகே 2 இடங்களில் திருட்டு சம்பவம் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் அருகே உள்ள மூலகாட்டானூர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவர் அப்பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். பின்னர் இரவு வீடு திரும்பிய சேகர், வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடந்ததுடன் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த மடிக்கணினி மற்றும் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தது தெரிய வந்தது.

இந்த திருட்டு குறித்து பசுபதிபாளையம் போலீசில் சேகர் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து இதில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர் அருகே உள்ள செல்லாண்டிபாளையத்தில் மளிகை கடை நடத்தி வருபவர் ஆனந்தன். இவர், நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.18 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து, தாந்தோணிமலை போலீசில் ஆனந்தன் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News