செய்திகள்
சதீஷ்

சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் இடையிலான ஆட்டம் மழையால் ரத்து

Published On 2021-07-20 15:54 GMT   |   Update On 2021-07-20 17:39 GMT
எம். முகமது, அஸ்வின் கிறிஸ்ட் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் இன்றைய 2-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

ஆர். சதீஷின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திருப்பூர் தமிழன்ஸ் அணி 8.2 ஓவரில் 36 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

8-வது விக்கெட்டுக்கு எம். முகமது உடன் அஸ்வின் கிறிஸ்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி திருப்பூர் அணியை சரிவில் இருந்து மீட்டது. திருப்பூர் அணி 16.2 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

எம். முகமது 10 ரன்களுடனும், அஸ்வின் கிறிஸ் 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி சார்பில்  ஆர். சதீஷ் 5 விக்கெட்டும், தேவ் ராகுல் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

மழை தொடர்ந்ததால் இரவு 11 மணிக்கு இந்த ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
Tags:    

Similar News