செய்திகள்
இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு- 9 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் கைபர் பாக்துன்குவா மாகாணத்தில் இறுதி ஊர்வலத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
பெஷாவர்:
பாகிஸ்தானின் கைபர் பாக்துன்குவா மாகாணம், லோயர் தீர் மாவட்டத்தில் நேற்று இறுதி ஊர்வலம் ஒன்று நடந்தது. இதில், திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட நிலத் தகராறில் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.