ஆன்மிகம்
இரட்டை ஆஞ்சநேயர்

இரட்டை ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2020-08-19 06:51 GMT   |   Update On 2020-08-19 06:51 GMT
செம்பனார்கோவில் அருகே மேலப்பாதி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இரட்டை ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
செம்பனார்கோவில் அருகே மேலப்பாதி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இரட்டை ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி இரட்டை ஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர் மாலை, வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை ஆகிய மாலைகள் அணிவிக்கப்பட்டு அர்ச்சனை, ஆராதனை நடைபெற்றது.

இதேபோல கஞ்சநகரம் பாலஆஞ்சநேயர் கோவில், பொன்செய் அசைந்தாடும் பால ஆஞ்சநேயர் கோவிலிலும் அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
Tags:    

Similar News