கோவில்கள்
பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி திருக்கோவில்- கன்னியாகுமரி

பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி திருக்கோவில்- கன்னியாகுமரி

Published On 2021-12-03 06:32 GMT   |   Update On 2021-12-03 06:32 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சுவாமி : பூதலிங்கசாமி.
அம்பாள் : சிவகாமி அம்பாள்.
மூர்த்தி : நினைத்ததை முடிக்கும் விநாயகர், கன்னி விநாயகர், சுப்ரமணிய சுவாமி, மகிழமுடைய சாஸ்தா, சண்டீகேஸ்வரர், தக்ஷிணாமூர்த்தி.
தலவிருட்சம் : வில்வம் மரம்.

தலச்சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். நினைத்ததை முடிக்கும் விநாயகர் பெருமானுக்கு தனிக்கோவில் உள்ளது. சுப்ரமணிய சுவாமிக்கும் சாஸ்தாவிற்க்கும் தனிச் சன்னதி உள்ளது. இது ஒரு குகைவரைக் கோவில். ஒரே கல்லினால் ஆன சங்கிலி உள்ளது. உயரமான கொடி மரம் உள்ள கோவில், எடை அதிகம் உடைய தேர் உள்ளது, கோவில் உள்ளே தேர் வலம் வரும். பூதபாண்டியில் இருந்து 5 கி.மீ தொலைவில் ஔவையாருக்கு தனிக்கோவில் உள்ளது.

தல வரலாறு : பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. சுமார் 500-600 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. தாடகை மலை (இராமாயணத்தில் ராமன் தாடகையை வதம் செய்த இடம்) முகப்பில் கோவில் உள்ளது. ஔரங்கசிப் காலத்தில் இங்குள்ள மன்மதன் சிலை உடைக்கப்பட்டது. தராசு மூலம் பரிகாரம் நிறைவேற்றப்படும்.

நடைதிறப்பு: காலை 4.00 மணி முதல் 11.00 வரை மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை.

பூஜை விவரம் :

பௌர்ணமி விசேச பூஜை,
பிரதோஷ வழிபாடு,
அமாவசை கிரிவலம் சிறப்பில் ஒன்று.

கோவில் முகவரி :

பூதலிங்கசாமி திருக்கோவில்,
பூதபாண்டி,
நாகர்கோவில்,
கன்னியாகுமரி மாவட்டம்.
Tags:    

Similar News