ஆன்மிகம்
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் திருக்கல்யாண ஏடு வாசிப்பு நிகழ்ச்சி

Published On 2020-12-19 05:33 GMT   |   Update On 2020-12-19 05:33 GMT
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் அய்யா வைகுண்ட சாமிக்கு திருக்கல்யாண ஏடு வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து பக்தர்கள் அய்யா வைகுண்ட சாமிக்கு கல்யாண சீர் வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி 4-ந் தேதி தொடங்கியது. விழாவின் 15-வது நாளான நேற்று அய்யா வைகுண்ட சாமிக்கு திருக்கல்யாண ஏடு வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாலை 4 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும் தொடர்ந்து பக்தர்கள் அய்யா வைகுண்ட சாமிக்கு கல்யாண சீர் வரிசையாக பழங்கள், இனிப்புகள், பலகாரங்கள், வெற்றிலை, பாக்குகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நடந்த திருக்கல்யாண ஏடு வாசிப்பு நிகழ்ச்சிக்கு பால.பிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கி திருஏடு வாசிப்புக்கு விளக்க உரையாற்றினார்.

இரவு 9 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும், இனிமமும் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News