செய்திகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி

வேலூர் ஒன்றியத்தில் மறுவாக்கு எண்ணிக்கையில் தோல்வியடைந்த விடுதலை சிறுத்தை வேட்பாளர்

Published On 2021-10-13 08:25 GMT   |   Update On 2021-10-13 08:25 GMT
வேலூர் ஒன்றியத்தில் வாக்குகள் சரியாக எண்ணப்படவில்லை என்றும், அதனால் ஊராட்சி ஒன்றிய 7 - வது வார்டு கவுன்சிலர் வாக்குகளை மறுபடியும் எண்ண வேண்டும் என்று அ.தி.மு.க. வேட்பாளர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கோரிக்கை வைத்தார்.

வேலூர்:

வேலூர் ஊராட்சி ஒன்றிய 7 - வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் கோட்டி என்கிற கோவேந்தன் உதய சூரியன் சின்னத்திலும், அ.தி.மு.க. சார்பில் அப்துல்லாபுரம் சிவம் மற்றும் பலர் போட்டியிட்டனர். 7-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

இதில், சிவத்தை விட கோவேந்தன் குறைந்தளவு வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெறும் நிலையில் இருந்தார். அவர் 42 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் வாக்குகள் சரியாக எண்ணப்படவில்லை என்றும், அதனால் ஊராட்சி ஒன்றிய 7 - வது வார்டு கவுன்சிலர் வாக்குகளை மறுபடியும் எண்ண வேண்டும் என்று அ.தி.மு.க. வேட்பாளர் சிவம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கோரிக்கை வைத்தார். அதனால் 7-வது வார்டு கவுன்சிலருக்கு பதிவான வாக்குகள் இன்று அதிகாலை மறுஎண்ணிக்கை நடைபெற்றது.

இதில் 27 வாக்குகள் அதிகம் பெற்று அ.தி.மு.க. வேட்பாளர் சிவம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

Tags:    

Similar News