செய்திகள்
கைது

ஓமலூர் அருகே சிறுமி கடத்தல்- போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

Published On 2020-12-03 07:39 GMT   |   Update On 2020-12-03 07:39 GMT
ஓமலூர் அருகே 17 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
ஓமலூர்:

ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி குதிரைகுத்தி பள்ளம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் சிவசங்கரன் (வயது 19), கூலித்தொழிலாளி. இவர் கடந்த மாதம் 20-ந் தேதி ரெட்டியூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டதாக தீவட்டிப்பட்டி போலீசில் அந்த சிறுமியின் தாயார் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து சிறுமியையும், அவரை கடத்தி சென்ற சிவசங்கரனையும் போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் இந்த வழக்கு ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற சிவசங்கரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அந்த சிறுமியை சேலத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News