உள்ளூர் செய்திகள்
கைது

பொன்னேரியில் துணிகடையில் திருடியபோது கொள்ளையர்களை விரட்டி பிடித்த போலீஸ்காரர்

Published On 2022-01-15 09:09 GMT   |   Update On 2022-01-15 09:09 GMT
பொன்னேரியில் தனி ஒருவராய் துணிகரமாக 2 கொள்ளையர்களை பிடித்த போலீஸ்காரர் அன்பழகனை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினார்கள்.

பொன்னேரி:

பொன்னேரியில் பொங்கலை முன்னிட்டு துணிக்கடைகளில் கூட்டம் அலை மோதியது பொன்னேரி அண்ணா சிலை அருகே ஆண்கள் ஆடையகம் ஒன்றில் அடையாளம் தெரியாத 2 பேர் உள்ளே நுழைந்து துணி வாங்குவது போல் நடித்து பணம் கொடுக்காமல் துணியை பண்டலாக தூக்கிக் கொண்டு ஓடினர்.

உடனடியாக பொன்னேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து பணம் கொடுக்காமல் தப்பி ஓடிய 2 பேரை பிடித்தவுடன் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்து போலீசை தாக்கினர்.

இதைத்தொடர்ந்து தாயுமான செட்டி தெருவில் வேடிக்கை பார்க்க பொது மக்கள் கூட்டம் கூடியது. போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது பொதுமக்களையும் கொள்ளையர்கள் மிரட்டியதால் பொதுமக்கள் யாரும் உதவி செய்யாத நிலையில் இருவரையும் தப்பவிடாமல் போலீஸ்காரர் அன்பழகன் தனி ஒருவராய் அரை மணி நேரமாக பிடித்து வைத்து போராடிக் கொண்டிருந்தார்.

பின்னர் பொன்னேரி போலீசார் வந்து இருவரையும் வாகனத்தில் ஏற்றி சென்று விசாரித்தபோது அவர்கள் பொன்னேரி சாமுண்டீஸ்வரி நகரை சேர்ந்த ஸ்டீபன் என்ற ஸ்டீபன் ராஜ், சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி என்பது தெரியவந்தது. பிடிபட்ட ஸ்டீபன்ராஜ் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளி ஆவார். தனி ஒருவராய் துணிகரமாக 2 கொள்ளையர்களை பிடித்த போலீஸ்காரர் அன்பழகனை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினார்கள்.

Tags:    

Similar News