செய்திகள்
பள்ளி ஆசிரியர்

ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு- சென்னையில் 3 நாட்கள் நடக்கிறது

Published On 2021-02-19 07:04 GMT   |   Update On 2021-02-19 07:07 GMT
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு சென்னையில் 3 நாட்கள் நடைபெறுகிறது.
சென்னை:

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு இன்றுடன் 3 நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது.

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு இன்று நடக்கிறது. 27 காலி இடங்களுக்கு 67 ஆசிரியர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல நாளை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கிறது.

ஆங்கில பாடப்பிரிவை சேர்ந்த 200 ஆசிரியர்கள், கணிதம் 160, அறிவியல் 143 பேர் இந்த கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 270 இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.

இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்கள் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுகிறார்கள்.

இதேபோல சிறப்பு ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுகிறது. பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன், இணை இயக்குனர்கள் பொன்னையா, குமார் ஆகியோர் மேற்பார்வையில் வருகிற 21-ந் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது.

Tags:    

Similar News