செய்திகள்
புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்சை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது பாட்னா பைரேட்ஸ்
புரோ கபடி லீக் தொடரில் நொய்டாவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது பாட்னா பைரேட்ஸ் அணி.
7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நொய்டாவில் நேற்று இரவு நடந்த 124வது லீக் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.
ஆட்டத்தின் ஆரம்பத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி வீரர்கள் அதிரடியாக ஆடி புள்ளிகளை குவித்தனர். இறுதியில், 69 - 41 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தி வெற்றி பெற்றது பாட்னா பைரேட்ஸ் அணி.
ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட பாட்னா பைரேட்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தை ஆறுதல் வெற்றியோடு முடித்துள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர் பர்தீப் நர்வால் 36 புள்ளிகள் குவித்தார்.
மற்றொரு போட்டியில் புனேரி பால்டன் அணியை 43-39 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தா அணி வென்றது.