உள்ளூர் செய்திகள்
குப்பைகளில் தீ-புகையினால் வாகன ஓட்டிகள் அவதி
செங்கோட்டை அருகே சாலையோர குப்பையில் இருந்து வெளியாகும் புகையால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள இலத்தூர் சாலையோரங்களில் குப்பைகள் மற்றும் தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டப்பட்டுள்ளது.
அதன் மீது சிலர் தீ வைத்து விடுகின்றனர். இதனால் அந்த சாலைப்பகுதிகள் நாள்தோறும் புகை மண்டலமமாக காட்சி அளிக்கிறது. அந்த சாலை வழியாக தினமும் ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர்.
குப்பையில் இருந்து வெளியாகும் புகையினால் கார்கள், பஸ், கார், மோட்டார் சைக்கிள் மற்றும் நடந்து செல்லும் பயணிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.