செய்திகள்
கோப்பு படம்

14 லட்சத்து 25 ஆயிரம் பேர் பலி - புரட்டி எடுக்கும் கொரோனா

Published On 2020-11-26 01:20 GMT   |   Update On 2020-11-26 01:20 GMT
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 லட்சத்து 25 ஆயிரத்தை கடந்தது.
ஜெனீவா:

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 218 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ளது. 

குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 481 பேர் உயிரிழந்துள்ளனர். 

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 2 ஆயிரத்து 280 பேரும், மெக்சிகோவில் 813 பேரும், இத்தாலியில் 722 பேரும் கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, 6 கோடியே 7 லட்சத்து 398 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 1 கோடியே 73 லட்சத்து 28 ஆயிரத்து 145 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 887 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 4 கோடியே 19 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 14 லட்சத்து 25 ஆயிரத்து 828 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 2,68,198
பிரேசில் - 1,70,799
இந்தியா - 1,34,699
மெக்சிகோ - 1,02,739
இங்கிலாந்து - 56,533
இத்தாலி - 52,028
ஸ்பெயின் - 44,037
ஈரான் - 46,207
Tags:    

Similar News