உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

மோட்டார் சைக்கிள் மீது மோதி வாலிபர் பலி

Published On 2022-01-26 09:56 GMT   |   Update On 2022-01-26 09:56 GMT
செம்பனார்கோயில் அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதி வாலிபர் உயிரிழந்தார்.
தரங்கம்பாடி:

செம்பனார்கோயில் அருகே கண்டியன் கடலி கிராமத்தை சேர்ந்தவர் லூர்துசேவியர் (வயது 36). சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் செம்பனார்கோயில் நோக்கி வந்து கொண்டிருந்தார். 

அப்போது முன்னால் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதினார். 

இதில் தூக்கிவீசப் பட்டு பலத்த காயமடைந்த லூர்துசேவியரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

அங்கு சிகிச்சை பலனின்றி லூர்து சேவியர் இறந்தார். இதுகுறித்து செம்பனார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News