செய்திகள்
தற்கொலை

களக்காடு அருகே கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2021-09-02 09:56 GMT   |   Update On 2021-09-02 09:56 GMT
களக்காடு அருகே செல்போன் விளையாடியதை கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
களக்காடு:

களக்காடு அருகே உள்ள தெற்கு காடுவெட்டி சர்ச் தெருவை சேர்ந்தவர் பென்யமீன் பாக்கியராஜ் (வயது48), கூலி தொழிலாளி. இவரது மூத்த மகள் அன்சிரூத் (19). பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 24-ந்தேதி அன்சிரூத் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் அவரது தாயார் எப்சிபாய் வசந்தகுமாரி அவரை கண்டித்தார். இதையடுத்து அன்சிரூத் மனவேதனை அடைந்தார்.

அதன் பின்னர் எப்சிபாய் வசந்தகுமாரி தேசிய ஊரக வேலை திட்டத்திற்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த அன்சிரூத் வி‌ஷம் குடித்தார். மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News