செய்திகள்
பிரியா மாலிக்

தங்கம் வென்றது உண்மை தான், ஆனால்?

Published On 2021-07-26 05:29 GMT   |   Update On 2021-07-26 05:29 GMT
டோக்கியோ ஒலிம்பிக்கில் பிரியா மாலிக் தங்கம் வென்றதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டோக்கியோ ஒலிம்பிக்சில் மீராபாய் சானு இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்று இருக்கிறார். பெண்களுக்கான பளு தூக்குதல் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார். இந்த நிலையில், ரஸ்டலர் பிரியா மாலிக் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

பிரியா மாலிக் தங்கம் வென்றதற்கு பலர் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், பிரியா மாலிக் தங்கம் வென்றது உண்மை தான். ஆனால் அவர் கேடட் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்று தங்க பதக்கம் வென்றார். இதுவரை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஒரு பதக்கம் மட்டுமே வென்று இருக்கிறது. 



ஹங்கேரியில் நடைபெற்று வரும் கேடட் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா மொத்தம் இரண்டு தங்க பதக்கங்களை வென்றது. 43 கிலோ மற்றும் 73 கிலோ எடை பிரிவுகளில் தானு மாலிக் மற்றும் பிரியா மாலிக் இறுதி போட்டிக்கு முன்னேறி தங்க பதக்கம் வென்றனர். இதுபற்றிய செய்தி தொகுப்புகள் ஜூலை 23 ஆம் தேதி பல்வேறு வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் பிரியா மாலிக் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவில்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

Tags:    

Similar News