ஆன்மிகம்
மார்கழி மாதம் முழுவதும் திருப்பரங்குன்றம் கோவிலில் நடைதிறப்பு மாற்றம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மார்கழி மாத திருப்பள்ளியெழுச்சி பூஜையை முன்னிட்டு வருகிற 16-ந்தேதி முதல் ஜனவரி 13-ந்தேதி வரை கோவில் நடை திறப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மார்கழி மாதத்தில் கோவில் நடை திறப்பு நேரம் மாற்றப்படுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டிற்கான மார்கழி மாத திருப்பள்ளியெழுச்சி பூஜையை முன்னிட்டு வருகிற 16-ந்தேதி (புதன்கிழமை) முதல் ஜனவரி 13-ந்தேதி (புதன்கிழமை) வரை ஒரு மாதத்திற்கு தினமும் அதிகாலையில் 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 11.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 7.45 நடை சாத்தப்படுகிறது. இந்த தகவலை கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்துள்ளார்.