ஆன்மிகம்
திருப்பரங்குன்றம்

மார்கழி மாதம் முழுவதும் திருப்பரங்குன்றம் கோவிலில் நடைதிறப்பு மாற்றம்

Published On 2020-12-12 06:54 GMT   |   Update On 2020-12-12 06:54 GMT
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மார்கழி மாத திருப்பள்ளியெழுச்சி பூஜையை முன்னிட்டு வருகிற 16-ந்தேதி முதல் ஜனவரி 13-ந்தேதி வரை கோவில் நடை திறப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மார்கழி மாதத்தில் கோவில் நடை திறப்பு நேரம் மாற்றப்படுவது வழக்கம். 

அதேபோல இந்த ஆண்டிற்கான மார்கழி மாத திருப்பள்ளியெழுச்சி பூஜையை முன்னிட்டு வருகிற 16-ந்தேதி (புதன்கிழமை) முதல் ஜனவரி 13-ந்தேதி (புதன்கிழமை) வரை ஒரு மாதத்திற்கு தினமும் அதிகாலையில் 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 11.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. 

பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 7.45 நடை சாத்தப்படுகிறது. இந்த தகவலை கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News