செய்திகள்
மாநில தேர்தல் ஆணையம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

Published On 2021-09-18 19:28 GMT   |   Update On 2021-09-18 19:28 GMT
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் செப்டம்பா் மாதம் 15-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. 

இதையடுத்து, 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபா் 6, 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், 9 மாவட்டங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, காஞ்சிபுரத்துக்கு அமுதவள்ளி, செங்கல்பட்டுக்கு சம்பத், விழுப்புரம் பழனிசாமி, கள்ளக்குறிச்சி விவேகானந்தன், வேலூர் விஜயராஜ்குமார், ராணிப்பேட்டை மதுமதி, திருப்பத்தூர் காமராஜ், திருநெல்வேலி ஜெயகாந்தன், தென்காசி பொ.சங்கர் ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக நியமினம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News