செய்திகள்
திருப்பூரில் உள்ள ஒரு வீட்டில் நவராத்திரி வழிபாடு நடைபெற்ற காட்சி.

திருப்பூரில் நவராத்திரி வழிபாடு

Published On 2021-10-15 11:45 GMT   |   Update On 2021-10-15 11:45 GMT
உலக நன்மைக்காக தன்வந்திரி மந்திரம் சொல்லி நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
திருப்பூர்:

நவராத்திரி விழாவை முன்னிட்டு திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. மேலும் பல்வேறு வீடுகளில் கொலு வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

திருப்பூர் மண்ணரை பகுதியிலுள்ள மரகதம் என்பவர் வீட்டில் கொலு வைத்து துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய கடவுள் வேடமணிந்து முப்பெரும் தேவிகள் முன்னிலையில் பரதநாட்டியம் ஆடி நவராத்திரி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

அதே பகுதியில் தாரணி என்பவரது இல்லத்தில் நோய் நொடி இல்லாமல் வாழவும், உலக நன்மைக்காகவும் தன்வந்திரி மந்திரம் சொல்லி நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  
Tags:    

Similar News