செய்திகள்
தற்கொலை

பொத்தேரி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Published On 2021-08-01 12:01 GMT   |   Update On 2021-08-01 12:01 GMT
பொத்தேரி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரி பிள்ளையார் கோவில் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 25). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்து நேற்றுமுன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் தொங்கிய ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News