செய்திகள்
கொரோனா வைரஸ்

தஞ்சையில் கொரோனாவுக்கு முதியவர் பலி

Published On 2021-07-31 10:31 GMT   |   Update On 2021-07-31 10:31 GMT
தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 65 ஆயிரத்து 733 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 742 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 144 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 65 ஆயிரத்து 733 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் பலியானார். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 847 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,162 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News