உள்ளூர் செய்திகள்
பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடந்தது.

உத்தராபதீஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா

Published On 2022-05-05 07:25 GMT   |   Update On 2022-05-05 07:25 GMT
திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற்றது.
நாகப்பட்டினம்:

திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடியில் உத்தராபதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 25-ம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

விழாவையொட்டி 24-ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை மற்றும் வாஸ்து சாந்தி உள்ளிட்டவை நடைபெற்றது.25-ம் தேதி காலை கொடியேற்றம் நடைபெற்றது.

இதையடுத்து முன்னதாக சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். 29-ம் தேதி தெருவடைச்சான் சப்பரம், 30-ம் அமுது படையல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமூர்த்தி சாமிகள் வீதியுலா நடைபெற்றது.

இதில் வேளாக்குறிச்சி ஆதீனம் திருப்புகலூர் 18-வது குருமகா சன்னிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள், ஆதீன இளவரசு நடேஸ்வர சாமிகள், கோவில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News