செய்திகள்
பிரதமர் மோடி

சுதந்திர தினம் உரையில் பொதுமக்கள் ஆலோசனை தேவை - பிரதமர் மோடி

Published On 2021-07-30 19:54 GMT   |   Update On 2021-07-30 19:54 GMT
இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் அடுத்த மாதம் 15-ம் தேதி நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
புதுடெல்லி:

டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.

நாட்டின் 75-வது சுதந்திர தின உரையில் தான் என்ன பேச வேண்டும் என்பது குறித்து பொதுமக்கள் ஆலோசனை வழங்கும்படி, பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், சுதந்திர தின விழா உரைக்கு பொதுமக்கள் தங்களது ஆலோசனையை, 'மை கவர்ன்மென்ட்' என்ற இணையதளம் வாயிலாக தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News