ஆன்மிகம்
ஆஞ்சநேயர்

செந்தூரமாக மாறும் ஆஞ்சநேயர் முகம்

Published On 2021-02-02 03:57 GMT   |   Update On 2021-02-02 03:57 GMT
தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில், உள்ள நவநீதகிருஷ்ணன் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யும்போது, அவரது முகம் படிப்படியாக செந்தூர நிறுத்திற்கு மாறுவதைக் காணலாம்.
தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் வழியில் இருக்கிறது, நவநீதகிருஷ்ணன் ஆலயம். இங்கு அருளும் ஆஞ்சநேயர், மிக அபூர்வமாக வடக்கு முகமாக காட்சி தருகிறார்.

பக்தர்கள் தங்களுக்கு நிறைவேற வேண்டிய காரியங்களை நினைத்து, மட்டை தேங்காயை ஒரு துணியால் மூடி அதை ஆஞ்சநேயர் சன்னிதியில் கட்டிவிட்டு வந்தால், விரைவில் பிரார்த்தனை நிறைவேறும்.

இந்த ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யும்போது, அவரது முகம் படிப்படியாக செந்தூர நிறுத்திற்கு மாறுவதைக் காணலாம். அவரது உடலில் நரம்புகள் ஓடுவதையும் நன்றாக பார்க்க முடியும்.
Tags:    

Similar News