செய்திகள்

திருப்பதியில் குழந்தை கடத்தியவர் கைது

Published On 2019-05-11 13:24 GMT   |   Update On 2019-05-11 13:24 GMT
குழந்தை கடத்தியவர் திருப்பதியில் நடமாடி வருவதை கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்த போலீசார் அவரை கைது செய்தனர்.
திருப்பதி:

திருப்பதியல் கடந்த ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி வீரேஷ் என்ற குழந்தை கடத்தப்பட்டது. குழந்தையை கடத்தி சென்ற விஷ்வம்பர் (53) நேற்று திருப்பதியில் நடமாடி வருவதை கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் அடையாளம் கண்டு விஷ்வம்பரை கைது செய்தனர். விசாரணையில் விஷ்வம்பர் ஒரு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும் ஜாமீனில் விடுதலையாகி திருப்பதிக்கு வந்ததும் தெரிய வந்தது.

விஷ்வம்பரிடம் இருந்த திருட்டு செல்போன்களை கைப்பற்றி கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் திருப்பதிக்கு வராமல் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News