வழிபாடு
நம்மிடம் அளவற்ற கருணை கொணட ஸ்ரீநரசிம்மரிடம் பயம் ஏன்?
தன்னை நம்பும் பக்தர்களிடம் அத்தனை அன்பும், கருணையும் நரசிம்மருக்கு உண்டு. ஆதலால்தான் அவருக்கு ‘பக்தவத்சலன்’ என்ற திருநாமம் ஏற்பட்டது.
நரசிம்மருடைய அவதாரத் தோற்றம், சிம்ம முக உருவில் பயங்கரமாகவும், பக்தனான குழந்தை பிரகலாதனுக்கு இரணியகசிபு இழைத்த கொடுமைகளினால் உக்கிரமான கோபம் கொண்டவராகவும் சேவை சாதிப்பதால், அவரை பூஜிப்பது கடினம் என்று பலர், தவறான கருத்தை கொண்டுள்ளனர்.
ஏனெனில் தன்னை நம்பும் பக்தர்களிடம் அத்தனை அன்பும், கருணையும் அவருக்கு உண்டு. ஆதலால்தான் ‘பக்தவத்சலன்’ என்ற திருநாமம் ஏற்பட்டது. அதாவது, தன் பக்தர்களுக்கு குழந்தை போன்றவன் என்பது பொருள்.
தனக்கு அபசாரம் செய்தவர்களை நரசிம்மர் பொறுத்துக் கொள்வார். ஆனால் தனது பக்தர்களுக்கு அநீதி செய்பவர்களை பொறுத்துக் கொள்ள அவரால் முடியாது.