வழிபாடு
தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்த காட்சி.

பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம்

Published On 2022-03-17 08:57 GMT   |   Update On 2022-03-17 08:57 GMT
பறக்கையில் பிரசித்தி பெற்ற மதுசூதனப் பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
குமரி மாவட்டம் பறக்கையில் பிரசித்தி பெற்ற மதுசூதனப் பெருமாள் கோயில் உள்ளது.

இந்த கோவில் பங்குனித் திருவிழா கடந்த 9-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு சாமி பூப்பந்தல் வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சி நடந்தது.

இதுபோல் தினமும் காலை கணபதி ஹோமம், மற்றும் காலை, மாலை நேரத்தில் சாமி பல்வேறு வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சிகள் நடந்தது.

4-ம் திருவிழா 12-ம் தேதி நடந்தது. அன்று மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கடந்த 15-ந்தேதி 7-ம் திருவிழா நடந்தது. அன்று மாலை சமயச் சொற்பொழிவு, இரவு 8 மணிக்கு தோல்பாவை கூத்து போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. இதனையொட்டி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. இதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இன்று இரவு 9 மணிக்கு சப்தாவர்ணமும், வெள்ளி கருடவாகனத்தில் சாமி வேட்டைக்கு எழுந்தருளல் போன்ற நிகழ்ச்சிகள் நடக் கிறது. 10-ம் திருவிழா நாளை (18-ந்தேதி) நடக்கிறது.

இதில் முக்கிய நிகழ்ச்சியாக இரவு 11 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது.
Tags:    

Similar News