செய்திகள்
சீர்காழி அருகே மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலி
மர்ம காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை பலியான சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழையார் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஹரிணி (வயது3). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார்.
இந்த நிலையில் குழந்தை ஹரிணி கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தார். இதையடுத்து குழந்தையை அவரது பெற்றோர் சீர்காழி அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தை ஹரிணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் .
இதற்கிடையே போதிய டாக்டர்கள் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியாமல் குழந்தை பலியானதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
மர்ம காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை பலியான சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழையார் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஹரிணி (வயது3). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார்.
இந்த நிலையில் குழந்தை ஹரிணி கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தார். இதையடுத்து குழந்தையை அவரது பெற்றோர் சீர்காழி அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தை ஹரிணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் .
இதற்கிடையே போதிய டாக்டர்கள் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியாமல் குழந்தை பலியானதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
மர்ம காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை பலியான சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.