செய்திகள்
பராஸ் கட்கா

சேஸிங்கில் சதம் அடித்து நேபாள கேப்டன் பராஸ் கட்கா சாதனை

Published On 2019-09-29 13:59 GMT   |   Update On 2019-09-29 13:59 GMT
சிங்கப்பூர் அணிக்கெதிராக சேஸிங்கில் சதம் அடித்து நேபாள கேப்டன் பராஸ் கட்கா சாதனைப் படைத்துள்ளார்.
நேபாளம், சிங்கப்பூர் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நேபாளம் - சிங்கப்பூர் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சிங்கப்பூர் 151 ரன்கள் சேர்த்தது. பின்னர் 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் களம் இறங்கியது. தொடக்க வீரராக களம் இறங்கிய கேப்டன் பராஸ் கட்கா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 52 பந்தில் 7 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இவரது சதத்தால் நேபாளம் அணி 16 ஓவரில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பராஸ் கட்கா சதம் அடித்ததன் மூலம் கேப்டனாக சேஸிங்கில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

நெதர்லாந்து கேப்டன் பீட்டர் சீலர் ஆட்டமிழக்காமல் 96 ரன்களும், ஆஸ்திரேலியாவின் ஸ்மித் 90 ரன்களும், வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் 88 ரன்களும், விராட் கோலி 82 ரன்களும் அடித்துள்ளனர்.
Tags:    

Similar News