செய்திகள்
பூதலூர் அருகே விவசாயி தற்கொலை - போலீசார் விசாரணை
பூதலூர் அருகே விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பூதலூர்:
பூதலூர் அருகே உள்ள கோவில்பத்து தொண்டமார் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65), விவசாயி. வயிற்று வலியால் அவதிபட்ட செல்வராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து செல்வராஜின் மகன் பிரபாகரன் பூதலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.