உள்ளூர் செய்திகள்
தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.

இணைப்பு சாலை

Published On 2022-05-06 09:47 GMT   |   Update On 2022-05-06 09:47 GMT
தென்காசி ரோட்டுக்கான இணைப்பு சாலை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறி உள்ளார்.
ராஜபாளையம்

ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராஜபாளையம் நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருப்பதால் புதிய பஸ் நிலையம் முதல் தென்காசி ரோடு வரை இணைப்புசாலை அமைக்க வேண்டி பொதுமக்கள் நீண்ட நாட்களாக என்னிடம் வலியுறுத்தி வந்தனர். 

கடந்த ஆட்சியில் (2016-2021) நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அரசு அதிகாரிகள் மேற்கண்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அரசாணை வெளியிடாமல், நிதி வழங்காமல் மக்களின் அத்தியாவசிய தேவைக்கு முக்கியத்துவம் தராமல் இழுத்தடித்ததுடன் பணியை நிறுத்தி வைத்திருந்தனர். 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் என்னுடைய  தொடர் முயற்சியால் சட்டமன்றத்தில் குரல் எழுப்பி துறை சார்ந்த அதிகாரிகளிடம் கவனத்திற்கு கொண்டு சென்றேன். மக்களுக்காக செயல்பட்டு வரும் தமிழக அரசு தற்போது பணி தொடங்குவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. விரைவில் நிலம் கையகப்படுத்தி பணிகள் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும் பணி தொடங்கிட அரசாணை வெளியிட்ட  முதலமைச்சருக்கும், நெடுஞ்சாலை துறை அமைச்சருக்கும், இதற்கு பரிந்துரை செய்த  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருக்கும்,  தொழில்துறை அமைச்ச ருக்கும், ராஜபாளையம் தொகுதி மக்கள் சார்பாகவும், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினரான எனது சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News