செய்திகள்
சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
விருதுநகர்:
திருப்பூர் மாவட்டம் பல வஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 20). கட்டிட தொழிலாளியான இவர் விருதுநகர் அய்யன் கோவில் பகுதியை சேர்ந்த தனது உறவினரான 15 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில் அவரை கடத்திச்சென்று திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பிரபாகரன் தான் திருமணம் செய்துகொண்ட 15 வயது சிறுமியுடன் புதுச்சேரியில் வசிப்பதாக தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் சிறுமியை மீட்டு விருதுநகர் காப்பகத்தில் சேர்த்தனர். சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக பிரபாகரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல வஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 20). கட்டிட தொழிலாளியான இவர் விருதுநகர் அய்யன் கோவில் பகுதியை சேர்ந்த தனது உறவினரான 15 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில் அவரை கடத்திச்சென்று திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பிரபாகரன் தான் திருமணம் செய்துகொண்ட 15 வயது சிறுமியுடன் புதுச்சேரியில் வசிப்பதாக தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் சிறுமியை மீட்டு விருதுநகர் காப்பகத்தில் சேர்த்தனர். சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக பிரபாகரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.